Washington, USA: The Wall Street Journal yesterdat (Saturday) reported that the U.S. has stepped up contingency planning in case Israel launches a military strike on Iran’s nuclear facilities. According to the report, U.S. defense officials are becoming increasingly concerned that Israel is preparing to carry out such a strike.

Tension has mounted between Israel and the West as a senior Israeli government official has called “absolute nonsense” a Friday report in Foreign Policy that Mossad agents posed as CIA officers in order to recruit members of a Pakistani terror group to carry out assassinations and attacks against the regime in Iran.



ஒரு முக்கோண பிரச்னை காரணமாக, ஈரான்மீது இஸ்ரேல் திடீர் தாக்குல் ஒன்றை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. முக்கோணத்தின் ஒரு முனையில் வாஷிங்டனும், மற்றைய முனைகளில் டெஹ்ரான் மற்றும் டெல்-அவிவ் நகரங்கள் உள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு முறுகல்நிலை தோன்றி, நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.
மறுபுறமாக ஈரானை இந்த இரு நாடுகளும் தனித்தனியாக குறிவைத்துள்ளன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்தி ஒன்றில், இஸ்ரேல் திடீரென ஈரானிய அணு உலைமீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திட்டம் ஒன்று தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலுக்கு ரெடியான உள்ளதாகத் தெரிகிறது.
நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது.
ஈரானுக்கு இந்த அச்சுறுத்தல் தவிர மற்றொரு சிக்கலும் உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஈரானின் எண்ணை ஏற்றுமதி தொடர்பாக பொருளாதாரத் தடை ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் பொருளாதாரமே, அவர்களது எண்ணை ஏற்றுமதியில்தான் தங்கியுள்ளது.
இதே விவகாரத்தின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடிய சிக்கல் ஒன்றும் ஏற்படவுள்ளது.
ஒருவேளை ஈரானிய எண்ணை ஏற்றுமதி மீது இவர்களது பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட்டால், உலக எண்ணை டிமான்டுக்கு ஏற்ற சப்ளை இல்லாத நிலை ஏற்படும். அதன் விளைவாக, எண்ணை விலை எகிறும். (ஈரானிய சப்ளை முழுமையாக நிறுத்தப்பட்டால், எண்ணை விலை தற்போது உள்ளதைவிட இருமடங்காகி விடும் என்று ஒரு கணிப்பு உண்டு!)
அமெரிக்க இஸ்ரேலிய முறுகல், நேற்று முன்தினம் வெளியாக செய்தியின் அடிப்படையில் தொடங்கியது. இஸ்ரேலிய உளவுத்துறை சி.ஐ.ஏ.-யின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது என்பதே அந்தச் செய்தி. (இங்கே கிளிக் செய்யவும்)
அமெரிக்கா அதிகாரபூர்வமாக இந்தச் செய்தியை இதுவரை மறுக்காத நிலையில், இஸ்ரேல் தனது மறுப்பை திட்டவட்டமான தெரிவித்துள்ளது. “மொசாத் உளவாளிகள் சி.ஐ.ஏ.-யின் பெயரைப் பயன்படுத்தினர் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமான கூற்று” என்பது இஸ்ரேலின் இன்றைய அறிக்கை. இந்த அறிக்கை வாஷிங்டனை கோபமடையச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
வாஷிங்டனின் கோபம் இஸ்ரேலிய அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே வெளியே தெரியவந்து விட்டது. ‘டைம்’ சஞ்சிகை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தி, “ஈரானிய விஞ்ஞானியைக் கொலை செய்ததன் பின்னணியில் இருப்பது மொசாத் மட்டும்தான்” என்கிறது.
அதாவது, ஈரான் அமெரிக்க உளவுத்துறையைக் குற்றம்சாட்ட, அமெரிக்கா இஸ்ரேலிய உளவுத்துறையைக் குற்றம் சாட்டிவிட்டது. எல்லாமே ஒரு கொலை தொடர்பாகத்தான்!
இப்போது புரிகிறதா இதிலுள்ள முக்கோணப் பிரச்னை?

நன்றி http://viruvirupu.com


"உள்நின்று உடற்றும் பசிப்பிணியால் உலகில் வாடும் மக்கள்தொகை எண்ணி முடியாது" உலகின் பசிப்பிணி போக்க நம்மால் என்ன செய்யமுடியும் என்று யோசித்த ஒரு உண(ர்)வகத்தைப் பற்றிய செய்தி இது:

எந்தவிதமான நிபந்தனையுமில்லை. இவ்வுலகின் பொல்லாப் பிணிகளான ஏழ்மையும் வறுமையும் பீடித்த யாரும் வந்து முற்றிலும் இலவசமாக வயிறார உண்ணலாம் என்று சவூதி அரேபியாவின் உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களும் இலவசமாக எங்கள் உணவகத்தில் வந்து உண்டு செல்வதற்காக எங்கள் கதவுகளைத் திறந்தே வைத்துள்ளோம் என்று தாயிஃப் நகரிலுள்ள அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார். தனது பெயரையும் குறிப்பிட அவர் விரும்பவில்லை.
இச்செய்தியை சவூதி அரேபியாவின் பிரசித்திப் பெற்ற ஓகாஸ் அரபு நாளேடு தெரிவித்துள்ளது.

நண்பகலிலிருந்து மதியம் 2 மணி வரை யாரும் வந்து உணவுண்டு செல்லலாம் என்று அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்,

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து.  இலவச உணவகங்களை நடத்த அனுமதி கோரி அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனராம்

நன்றி yarlmuslim



"அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்" (அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தொடுத்த அந்த மாணவர் சமூகங்களில் வேற்றுமையை ஏற்படுத்த முனைகிறார் என்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவர் கமல் நாயன் பிரபாகர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எஸ்.ஜே. முகோ பாத்தியாயா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

அவர்களுடைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"அரசியல் சட்டப் பிரிவு 159, ஒரு ஆளுநர் கடவுளின் பெயரால் அல்லது உளமாற உறுதி அளிக்கிறேன் என்று கூறிபதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கிறது. ஜார்கண்ட் கவர்னராக சையது அஹ்மது 'அல்லாஹ் பெயரால்' பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது செயல் அரசியல் சட்டப் பிரிவு 159-ன் கீழ் எதிரானது அல்ல. அல்லாஹ் பெயரால் ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டது அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதாகும்.

வழக்கு தொடர்ந்திருப்பவர் தீய எண்ணத்தோடு இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக கருத இடம் இருக்கிறது. உலகம் முழுவதும் கடவுள் உருவமற்றவராகவே கருதப்படுகிறவர். அப்படி இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட உருவத்தின் பெயரால் ஆளுநர் பதவிப் பிரமாணம் ஏற்றிருக்க வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 159-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவங்களை மட்டும் கட்டுப்படுத்தாது. கடவுள் என்ற வார்த்தை அரசியல் சட்டப் பிரிவு 159-ல் மதசார்பற்ற முறையிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்திருப்பவர் கடவுள் என்ற வார்த்தையை ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது உருவத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். கெட்ட நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதால் வழக்குதொடர்ந்திருப்பவர் 1லட்ச ரூபாய் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம்."

இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts