ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான  இஸ்ரேல்,  அணு உற்பத்தியை ஈரான்  உடனடியாக நிறுத்த தவறினால்  அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்திள்ளது. ஈரானின் அணு உற்பத்தி  நிலையங்கள் மீது தாக்குதலை
தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அவ்வாறு நடைபெறவில்லை எனில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்திருப்பதின் காரணமாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்துக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வசிக்கும் ஈரான் நடிகை கோல்ஷிப்டே பராஹனி, அந்நாட்டு பத்திரிகைக்கு அரை நிர்வாண போஸ் கொடுத்ததை கண்டித்து அவர் தாய்நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்பி பொம்மைகள் விற்று வந்த பத்துக்கும் அதிகமான  கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். மினி ஸ்கர்ட், நீச்சல் உடையில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்கள் பொது இடங்களில் செல்லும்

போது முகத்தை மறைக்கும் அளவுக்கு பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று ஈரானில் சட்டதிட்டம் உள்ளது.
இதுபோன்ற ஒரு சமுதாயத்தில் பார்பி பொம்மைகள் கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கின்றன. இந்த பொம்மைகள் விற்பனைக்கு ஈரானில் கடந்த 90ம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது.
பார்பி பொம்மைகளுக்கு பதில், ஈரான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தாரா - சாரா என்ற பெயரில் இரட்டை பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும், டெஹ்ரானில் பார்பி பொம்மைகளை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம் என்று அதிகாரிகள் கூறினர்.
thanks to asiananban.blogspot.com

வெளிநாடுகளைச் சேர்ந்த  161 இஸ்லாமிய மத போதகர்களை  இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் தங்கியிருந்து இஸ்லாம் பற்றி பிரசாரம் செய்து வரும் இந்தியாபங்களாதேஷ்பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களே இவ்வாறு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இவர்கள் நாடுமுழுவதும் சென்று இஸ்லாம் பற்றி போதனை செய்து வருகின்றனர்.எனினும்இவர்கள் வீசா சட்டங்களை மீறிசெயற்படுவதாக கூறியே நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களின் அலுவலகம் ஒன்று கொட்டாஞ்சேனையிலும் இயங்கி வருவதாகவும் தப்லித் ஜமாட் என்ற அமைப்பை சேர்ந்த இவர்கள் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு வந்துள்ள நிலையில் வேறு விடயங்களில் ஈடுபடமுடியாது என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும்குறித்த அமைப்பினர் எவ்வித அரசியல் நோக்கங்களையும் கொண்டவர்கள் அல்லர் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.இவர்கள் இஸ்லாமின் உண்மையை பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில் குறித்த அமைப்பினர்,முன்னாள் அமைச்சர் ஏ எச் எம்பௌஸியை சந்தித்து தம்மை இலங்கையில் இருந்து வெளியேறக்கூறும் உத்தரவை விலக்கிக்கொள்ளும் முயற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
நன்றி http://www.madawalanews.com 

அமெரிக்கா:
நிவ் யோக்கில் பலசரக்குக் கடை நடத்திவரும் முஸ்லிம் பெண்மணி   கடைக்கு கொள்ளையடிக்க வந்த கருப்பினத்தவனை கோடலியால் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரவு நேரம். கடையில் வாடிக்கையாளர்கள் இல்லை . cashier ஆக இருப்பதும் ஒரு பெண். அதட்டினால் பணத்தை தந்து விடுவாள் என்று தப்புக்கணக்கு போட்ட கொள்ளையனுக்கு என்ன நடந்தது என்று நீங்களும் பாருங்களேன் ..
நன்றி http://www.madawalanews.com 


பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2.38 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களின் கண்களைக் கட்டி தலிபான்கள் அவர்களை வரிசையாக நிற்க வைத்துள்ளனர்.

பின்னர் அவர்களின் பின்னால் நின்று தலிபான்கள் ஒவ்வொரு உறுப்பினராக சுட்டு வீழ்த்துகின்றனர்.

தமது இயக்க உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமைக்கே, இவர்களைக் கொன்றதாகவும் அக்காணொளியில் தலிபான் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தலிபான் இயக்க உறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டால் இத்தகைய கொலைகள் மேலும் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

இவ்வாறு கொல்லப்பட்ட இராணுவ வீரர்கள் வட மேற்கு பாகிஸ்தானில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்களின் சடலங்கள் இம்மாத ஆரம்பத்தில் மீட்கப்பட்டன.மேலும் இக்காணொளியில் கடத்திச் செல்லப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் இக்கடத்தல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதனை விளக்கும் பகுதியொன்றும் இடம்பெற்றுள்ளது.

 தலிபான் அமைப்பு இக்கொலைகளுக்கு உரிமைகோரியிருந்தது.  


பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் ஆபாசமான முறையில் புகைப்படத்திற்கு நின்ற ஈரான் நாட்டு நடிகைக்கு நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானைச் சேர்ந்த நடிகை  Golshifteh Farahani  (28) லியானோடோ டிகேப்ரியோவின் பாடி ஆப் லைஸ் படத்தில் நடித்துள்ளார்.
மேலும், பல இதழ்களுக்கு புகைப்படத்திற்கு நின்று வருகிறார். சமீத்தில் பிரான்ஸ் இதழ் ஒன்றுக்கு ஆபாசமான புகைப்படத்திற்கு நின்றார்.
அத்துடன் அந்த படத்தை பேஸ்புக்கிலும் வெளியிட்டதால் அதை உலகில் ஏராளமானோர் பார்த்தனர். இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது பிரான்சில் வசிக்கும் பராஹனி கூறுகையில், ஈரான் அரசு அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, தாய்நாட்டுக்கு வரவேண்டாம் என்று கூறினர் என்று பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து வேறு எந்த தகவலையும் பராஹனி கூறவில்லை. ஆனால் ஈரானில் மத பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க போவதாக நடிகை கூறியுள்ளார்

சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யபப்ட்டதாக இந்தியாவின் "த ஹிந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து புஹாரி மௌலவிக்கு சொந்தமான சம்மாந்துறை வீடு அண்மையில் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டதாக, லிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹன தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அறிவிறுத்தலையமுடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான எந்தவித பொருட்களை கைப்பற்ற முடியவில்லை. குறித்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புஹாரி மௌலவி இந்தியாவில் கைது செய்யப்பட்டமையையடுத்தே, அவரிற்கு சொந்தமான  சம்மாந்துறை வீட்டை சோதனையிட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தினால் உத்தரவு வந்திருக்கலாம் என எதிர்பார்ப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி தஹாயக்க மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.இப்றாஹீம் தலைமையிலான குழுவினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்றின் சாரதியான பாலகுமார் என்பவர் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான எபிடரின் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூருக்குச் செல்விருந்த மூன்று பயணிகளிடம் ஒப்படைப்பதற்காக இப்போதைப்பொருளை அவர் கொண்டுசென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மஹ்மூத் புஹாரி அப்துல் காதர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணான குலாம் அப்துல் ரஹ்மான் கத்ரியா, ராமநாதபுரம் எஸ்.வி. பட்டிணத்தைச் சேர்ந்த மொஹமட் யூஸுப் மர்சூக் ஆகிய 3 பயணிகள் பாலகுமார் இயக்கிய பஸ்ஸில் ஏறியதாகவும் அந்த பஸ்ஸில் போதைப்பொருள் பொதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பொதிகளை ஸ்கேன் சோதனையிடப்பட்ட பைகளுக்குள் போட முயன்ற போது  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இப்போதைப்பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லவரத்தைச் சேர்ந்த மணிகண்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


December 11, 2011.... AL-IHZAN World News

ஸ்டாக்ஹோம்: டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.



அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.


மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெளிநாட்டவர்கள் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.
கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45), இத்தாலியை சேர்ந்தவர் கியோவான்னி(38) என்றும் தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் பணிபுரிந்து வருவதாகவும், இவர்கள் கோட் அப்டு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்ற போது அவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தாரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலில் பலியானார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் சவாலாக விளங்கும் பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மெசூத், கடந்த 12ம் திகதி, வடக்கு வஜீரிஸ்தானின் டட்டாகெல் என்ற பகுதியில் நடந்த அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானார் என அமெரிக்க அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
ஆப்கன் எல்லையை ஒட்டிய அப்பகுதிக்கு அவர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதாக, தலிபான் அமைப்பினர் தந்தியில்லா வானொலி மூலம் பேசிக் கொண்டதை, இடைமறித்து ஒட்டுக் கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானி தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மெசூத் பலியானதாக வெளியான செய்தி தவறானது.
அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய கிளப்பி விடப்பட்ட புரளிகள் இவை எனத் தெரிவித்தார். டட்டாகெல் பகுதியில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் பலியானதாகவும் அவர்களில் ஹக்கீமுல்லா இல்லை எனவும் தலிபான் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ல் அந்த அமைப்பின் தலைவராக இருந்த பைதுல்லா மெசூத், ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியான பின், ஹக்கீமுல்லா தலைவரானார். 2010, ஜனவரியில், தெற்கு வஜீரிஸ்தானில் அவர் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து, தனது குரல் பதிவுச் செய்திகளை வெளியிட்டுத் தான் உயிரோடு இருப்பதை வெளியுலகுக்கு நிரூபித்தார் ஹக்கீமுல்லா
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் திடீரென புகை கிளம்பியதால் மாளிகை மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புகை வெள்ளை மாளிகை சுற்றுச்சுவர் அருகேயிருந்து கிளம்பியது, எனவே குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏதேனும் வீசியிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தை போன்று அமெரிக்காவுக்கு பொம்மை விமானத்தை அனுப்பி வைக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டிவுள்ள ஈரான் இராணுவ முகாம்களை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய ஆர்.-க்யூ-170 என்ற ஆளில்லா உளவு விமானம் ஈரான் இராணுவத்தினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
தற்பொழுது அந்த விமானம் தற்போது ஈரான் வசம் உள்ளது. இதையறிந்த அமெரிக்கா அந்த விமானத்தை திருப்பிதருமாறு ஈரானுக்கு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து ஈரான் வானொலி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க திருப்பி கேட்ட உளவு விமானத்திற்கு பதிலாக ‌அதே போன்ற பொம்மை விமானம் ஒன்றை தயாரித்துள்ளோம்.
இந்த விமானம் 30 செ.மீ நீளமும், 14 செ.மீ. அகலும் கொண்டது, 70 ஆயிரம் ரியால்(6 டொலர்) மதிப்புடையது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ம் திகதி ஈரான் நாட்டின் இஸ்லாமிய குடியரசு தோன்றியதன் 34-ம் ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அந்த நிகழ்வின் போது இந்த விமானத்தை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கவுள்ளோம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றது.
இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை.
ஏனெனில் விபத்து நடந்த போது தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லாததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 22 நேவிசீல் கமாண்டர்கள் உட்பட 30 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுதந்திர தினத்தன்று நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, குறித்த காலம் வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆதரவாளர்களிடம் டிரான் அலஸ் கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் பல அமைப்புக்கள் பாரியளவில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன.
எனினும், எதிர்வரும் பெப்பரவரி மாதம் 4ம் திகதி வரையில் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தாது அமைதியை பேணுமாறு டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியுள்ளார்.
சுதந்திர தினத்தன்று சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படாவிட்டால் மறு தினமே பாரியளவில் போராட்டங்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள,தென்னாசியாவிலே மிக உயரமான பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அடிக்கல் நாட்டவுள்ளார்.
“கொழும்பு லோட்டஸ் ரவர்” என பெயரிடப்பட்ட நான்கு தட்டு மேடைகளை கொண்ட இந்த 350 மீட்டர் உயரமுடைய கோபுரமானது கொழும்பு டாக்டர். விஜேவர்த்தன மாவத்தையில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை பீடத்திலிருந்து இக்கோபுர நிர்மாணிப்புக்கான தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்டடத்திற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஆணையத்தால் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நிர்மாணப்பணிகளை 30 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கோபுரத்திலிருந்து ஐம்பது வரையான ஔிபரப்பு, ஒலிபரப்பு சேவைகள் வழங்கப்பட இருப்பதுடன் தொலைத்தொடர்பு துறையில் இருபது வரையான சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி வீதி - மவுன்ட்லெவனியாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

வாகன விபத்தை அடுத்து மவுன்ட்லெவனியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை வான் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

விபத்து இடம்பெற்றமைக்கு வானின் சாரதியே முழுமையான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

தற்சமயம் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Abu Dhabi, UAE: Landlords are being forced to introduce special deals and lower rates in order to attract tenants as new projects come on stream in the capital, a report has said. It also said that Abu Dhabi experienced a steady increase in unit introductions in 2011, which led to significant declines in rental rates especially in areas outside of the city such as Mohammad Bin Zayed City, which offered a bigger supply of new buildings.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் வீட்டு வாடகை சமீபகாலமாக அதிகரிக்கிறதா, குறைகிறதா? வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் யூனிட்டுகளின் உரிமையாளர்கள் வாடகையை குறைத்து, குடியிருப்போரை வசீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எங்கேயென்றால், அபுதாபியில்!
ரியல் எஸ்டேட் அட்வைசரி அமைப்பான டஸ்வீக் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தலைநகரில் வாடகை கீழ்நோக்கிச் செல்வதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு. காரணம், டிமான்டைவிட அதிகமாக கட்டப்படும் யூனிட்டுகள்தான்!
மொஹமட் பின் சையத் நகர்
பொதுவாகவே அபுதாபியில் 5 சதவீத வருடாந்த வாடகை அதிகரிப்பு அமலில் இருந்தது. தற்போது இந்த வாடகை அதிகரிப்பை தள்ளுபடி செய்துவிட வேண்டிய நிலையில் உள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக, காலியாக உள்ள வீடுகளுக்கு குடியிருப்போரை கவர்வதற்கு அது மட்டும் போதுமானதாக இல்லை.
சில யூனிட்களில் வாடகையுடன் இலவச பர்னிச்சர்களையும் கொடுக்க வேண்டியுள்ளது. எலக்ட்ரிசிட்டி மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை என்ற சலுகையை வழங்குகின்றனர் சில வீட்டு உரிமையாளர்கள். வேறு சிலரோ ஒருபடி மேலே போய், புதிதாக நீண்டகால வாடகை கன்ட்ராக்ட்களை கையொப்பம் இடுபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒருமாதம், அதிகபட்சம் இரண்டு மாதங்கள் இலவச வாடகை சலுகை கொடுக்கிறார்கள் என்கிறது டஸ்வீக் எஸ்டேட் ஆய்வு.
கடந்த 2011ம் ஆண்டு, அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்தது. முக்கியமாக புறநகரப் பகுதிகளில், உதாரணமாக மொஹமட் பின் சையத் நகர் போன்ற இடங்களில், கடந்த ஆண்டு புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகம்.
அல்-ரீம் தீவு குடியிருப்பு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட குடியிருப்பு யூனிட்டுகளின் எண்ணிக்கை, அங்கு ஏற்கனவே உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கையில் 10.5 சதவீதம். அதாவது ஒரு வருடத்தில், 10.5 சதவீத அதிக குடியிருப்புகள் தோன்றியுள்ளன. அல்-ரீம் தீவு வர்த்தக ரென்டல் இடங்களின் அதிகரிப்பு சதவீதம் இதைவிட அதிகம். 12.5 சதவீதத்தால் அந்த எண்ணிக்கை எகிறியுள்ளது.
கடந்த வருட இறுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் வேலைகள் இன்னமும் தொடர்வதால் இந்தப் பகுதியில் இந்த ஆண்டு முதலாவது காலாண்டிலும் அதே போன்ற அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். அதன் அர்த்தம், வாடகை இன்னமும் குறையப் போகின்றது.
ஜோன்ஸ் லாங் லாசால் நிறுவனத்தின் டைரக்டர் கிரெய்க் ப்ளம்ப், “2012-ம் ஆண்டு அபுதாபியின்
அபுதாபி டவுன்-டவுன் ஏரியா
ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் மிக மோசமான ஆண்டாக இருக்கப் போகின்றது. டிமான்ட் குறைவான காரணத்தால் வாடகை மட்டுமின்னி வீட்டு விலைகளிலும் பெரிய வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்டேட் வர்த்தகத்துக்கு இரு மோசமான நிலை என்றாலும், புதிதாக வீடு வாங்க திட்டமிடும் ஆட்களுக்கு இதுதான் அற்புதமான காலப்பகுதி” என்கிறார்.
சமீபத்தைய ஆய்வு ஒன்று, புதிதாக வீடு வாங்கும் எண்ணம் உடையவர்கள், விலை குறைந்து செல்வதைப் பார்த்து, தமது வீடு வாங்கும் திட்டத்தை மாதாமாதம் பிற்போட்டுக்கொண்டு செல்கின்றார்கள் என்றும் சொல்கிறது. இதனால், மார்க்கெட்டில் லிஸ்ட் செய்யப்பட்ட வீடுகள் தேங்கத் தொடங்க, விலை மேலும் குறைகின்றது.
துபாயில் நிலைமை இரு வருடங்களுக்குமுன் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது. வீட்டு விலைகளும், வாடகைகளும் குறைந்து செல்ல, புதிய யூனிட்டுகள் கட்டப்படுவதில் தேக்கம் ஏற்பட்டு, நிலைமை இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது விலை வீழ்ச்சி முன்புபோல இல்லாமல் குறைவாக உள்ளது.
துபாயின் த கிரீன்ஸ், அல்-பாஷா, துபாய் மரீனா மற்றும் டவுன்-டவுன் துபாயில் விலை வீழ்ச்சி கடந்த வருடம் வெறும் 5 சதவீதம்தான். ஆனால், துபாயின் வேறு சில பகுதிகளில் நிலைமை சீரடையவில்லை. உதாரணமாக, டிஸ்கவரி கார்டன்ஸ், ஜமேரியா லேக் டவர்ஸ், மற்றும் சிலிகன் ஓஆஸிஸ் பகுதிகளில் கடந்த வருட விலை வீழ்ச்சி 15 சதவீதம்வரை இருந்தது.
இந்தப் பகுதிகளில் குறைந்த விலைக்கு வீடுகளை வாங்கும் அளவில் இன்னமும் லிஸ்டிங்குகள் உள்ளன

Giglio, Italy: The captain of the Costa Concordia was ordered by the coastguard to return to the stricken ship after claiming that the evacuation was almost complete when it had scarcely begun, according to transcripts of radio calls and telephone conversations published today (Tuesday).

The transcripts indicate that the captain, Francesco Schettino, said he was going to return to the vessel. But two Italian newspapers, which published the transcripts, said that he instead walked from the rocks where the liner had come to rest to the port of Giglio.

நடுக்கடலில் கவிழ்ந்த கோஸ்டா கான்கோடியா கப்பலின் கேப்டன், பயணிகளை ஆபத்தில் விட்டுவிட்டு, கப்பலை விட்டு வெளியேறிய தகவலை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளன இரு இத்தாலியப் பத்திரிகைகள். கப்பலில் இருந்து வெளியேறி பாறைகளில் நின்றிருந்த கேப்டனை மீண்டும் கப்பலுக்கு செல்லுமாறு கடையோரக் காவற்படையினர் உத்தரவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அதிர்ச்சி அளிக்கும் இந்த உரையாடல்களை வெளியிட்டுள்ள இத்தாலியப் பத்திரிகைகள், இந்த உரையாடல்களின் ஒலிப்பதிவு தமக்கு எப்படிக் கிடைத்தது என தெரிவிக்கவில்லை. மீடியாவுக்கு தகவல் கிடைக்கும் சோர்ஸ் எது என்பதை வெளியிடத் தேவையில்லை என்பது இத்தாலியச் சட்டம்.
பயணிகள் வெளியேறியபோது சக பயணி ஒருவர் எடுத்த போட்டோ
கப்பலின் கேப்டன் பிரான்செஸ்கோ ஷீட்டினோ தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
‘கப்பலை கைவிடும்’ உத்தரவை கேப்டன்தான் கொடுத்திருக்கிறார். ‘கைவிடும் உத்தரவு’ (order to abandon) என்பது, இனி கப்பலை காப்பாற்ற முடியாது என்ற நிலை வரும்போது கேப்டனால் கொடுக்கப்படுவது. இந்த உத்தரவு கொடுக்கப்பட்டால், மாலுமிகள் அதன்பின் கப்பலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபடவேண்டும்.
கோஸ்டா கான்கோடியா கப்பல் விஷயத்தில் இதிலும் ஏதோ மர்மம் இருப்பதாக எழுதியுள்ளது இத்தாலியப் பத்திரிகை Corriere della Sera.
அந்தப் பத்திரிகைக்கு கிடைத்த தகவலின்படி, ‘கைவிடும் உத்தரவு’ கேப்டனால் கொடுக்கப்படுவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்னரே, பயணிகளை வெளியேற்ற லைஃப்-போட்கள் கடலில் இறக்கப்படத் தொடங்கிவிட்டன. “இது எப்படிச் சாத்தியம்?” என்று கேள்வி எழுப்பும் பத்திரிகை, இதில் ஏதோ மர்மம் உள்ளது என்கிறது.
பலரது சந்தேகம், கப்பலைக் கைவிடும் உத்தரவை கேப்டன் கப்பலில் இருந்து கொடுக்கவில்லை என்பதே. கப்பல் மூழ்கப் போகின்றது என்று தெரிந்தவுடன் கேப்டன் தாம் தப்புவதற்காக ஒரு லைஃப்-போட்டை கடலில் இறக்கியிருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு மாலுமிகள் சிலர் மற்றைய லைஃப்-போட்களை கடலில் இறக்கத் தொடங்கியிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
படகில் ஏறித் தப்பி கடற்கரையோரமாக உள்ள பாறைகளில் பாதுகாப்பாக நின்றவாறே “கப்பலை கைவிட்டுவிட்டு பயணிகளை வெளியேற்றுங்கள்”  என்ற உத்தரவை கேப்டன் கொடுத்திருக்க வேண்டும். கப்பலில் இருந்த ஆயிரக் கணக்கான பயணிகளும் உயிர்தப்ப ஒரே நேரத்தில் முயற்சி செய்யும்போது தமக்கு ஒரு படகு கிடைக்காது போய்விடலாம் என நினைத்தே, கேப்டன் இவ்வாறு செய்திருக்கலாம்.
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்
அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கும் விதத்தில் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் கேப்டனுடன் பேசிய ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளது மற்றொரு இத்தாலியப் பத்திரிகை Il Fatto.
லிவோர்னோ என்ற இடத்திலுள்ள கடலோரக் காவல்படையின் கமான்டிங் அதிகாரி, கப்பலோடு ரேடியோ தொடர்புகளை மேற்கொள்ள செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. காரணம், கப்பலின் கம்யூனிகேஷன் ரூமில் ரேடியோவை ஆபரேட் பண்ண யாரும் இல்லை. கடலோரக் காவல்படை அதிகாரி, கப்பல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, கேப்டனின் செல்போன் இலக்கத்தை பெற்று, அதில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
கப்பலின் மேல்தளத்திலுள்ள ஸ்விம்மிங்-பூல் கவிழ்ந்த நிலையில்..
00.32 மணிக்கு கேப்டன் தனது செல்போனில் பதிலளித்தார். அந்த விநாடியில் இருந்து அவரது உரையாடல் லிவோர்னோ கடலோரக் காவல்படை அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
“கேப்டன்.. இன்னமும் எத்தனை பயணிகள் கப்பலில் உள்ளார்கள்?”
“200 அல்லது 300 பேர் இருக்கலாம்”
“பயணிகள் அளைவரும் பத்திரமாக உள்ளார்களா? உயிரிழப்புகள் உண்டா?”
“சரியாகத் தெரியவில்லை. நான் கப்பல் உரிமையாளர்களுடன் போனில் பேசினேன். 40 பயணிகளைக் காணவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்”
“உங்களுக்கே சரியாகத் தெரியவில்லை, ஆனால் தரையில் உள்ள கப்பல் உரிமையாளர்களுககு தகவல் தெரிகிறதா? இது எப்படி சாத்தியம்?”
பதில் இல்ல.
“கேப்டன்.. நீங்கள் கப்பலில்தானே உள்ளீர்கள்?”
“இல்லை.. இல்லை.. நான் கப்பலில் இல்லை. கப்பலை கைவிடும் உத்தரவு கொடுக்கப்பட்டு விட்டது.”
“என்ன? கப்பலில் நீங்கள் இல்லாமல் கப்பலை கைவிடும் உத்தரவு கொடுத்தீர்களா?”
“நான் உத்தரவு கொடுத்தேனா? இல்லை.. இல்லை.. ம்.. நான் இங்கே இருக்கிறேன்”
“இங்கே என்றால் எங்கே? கப்பலிலா?”
கேப்டன் கப்பலில் இருந்தபோதும், தரையில் கைது செய்யப்பட்ட போதும்...
“இல்லை. வெளியே.. கடலில்.. பாறையில்..” அத்துடன் கேப்டன் தொடர்பை துண்டித்தார்.
மீண்டும் பல தடவைகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு வழியாக மீண்டும் ஒரு தடவை செல்போனை ஆன்ஸர் பண்ணினார். அப்போது நேரம், அதிகாலை 1.46
“நான் கப்பலின் கேப்டனுடன்தானே பேசுகிறேன்?”
“ஆம். கேப்டன்தான் பேசுகிறேன்”
“நீங்கள் இப்போது கப்பலில் இல்லை என்பது உண்மைதானே?”
“ஆம். கப்பலில் இல்லை. கப்பலை நான்…”
கேப்டனின் பேச்சை இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். நீங்கள் இப்போது கப்பலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். கப்பலில் இருந்து தொங்கும் கயிற்று ஏணி வழியாக மேலே ஏறிச் செல்லுங்கள். அங்கே நின்று மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யுங்கள்”
கேப்டனிடம் இருந்து பதில் இல்லை.
“அங்கே சென்று அங்கிருந்து எம்மை தொடர்புகொண்டு சரியாக எத்தனை பேர் கப்பலில் உள்ளனர் என்பதை எமக்கு தெரிவிக்க வேண்டும். எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள் என்ற தெளிவான பிரேக்-டவுன் தரவேண்டும்”
ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நடவடிக்கைகள்
“ஆனால் நான்.. நான்.. கப்பலுக்கு செல்வது..“
மீண்டும் இடைவெட்டினார் கடலோரக் காவல்படை அதிகாரி. “கேப்டன்.. கவனமாகக் கேளுங்கள்.. இது வேண்டுகோள் அல்ல.. கட்டளை. கப்பல் கைவிடப்படும் உத்தரவை கொடுத்து விட்டீர்கள். இப்போது நான்தான் கமாண்டர். நான் உத்தரவிடுகிறேன். உடனடியாக கப்பலுக்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஏற்கனவே சில பயணிகள் இறந்துவிட்டார்கள்”
“எத்தனை பேர் இறந்து விட்டார்கள்?”
“ஹா! நீங்கள் எமக்கு சொல்ல வேண்டும் அதை! கப்பல் கேப்டனுக்கு உங்கள் கப்பலில் எத்தனைபேர் இறந்தார்கள் என்ற விபரத்தை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக கப்பலுக்கு திரும்புங்கள். எத்தனை பேர் அஙற்தார்கள் என்று பார்த்துவிட்டு எங்களுக்கும் சொல்லுங்கள்.”
பதில் இல்லை.
“கேப்டன்.. என்ன பதிலில்லை? என்ன செய்வதாக உத்தேசம்? இப்படியே வீடு செல்வதாக திட்டமா? உங்கள் கப்பலுக்கு திரும்புங்கள். உத்தரவை மீறினால் கடுமையான தண்டனைக்கு உள்ளாக நேரிடும். என்ன.. கப்பலுக்கு திரும்புகிறீர்களா?
“சரி.. சரி.. கப்பலுக்கு திரும்புகிறேன். அங்கிருந்து உங்களை தொடர்பு கொள்கிறேன்”
இத்துடன் உரையாடல் முடிகிறது. ஆனால், கேப்டன் கடைசிவரை கப்பலுக்கு திரும்பவில்லை.

-கிக்லியோ, இத்தாலியில் இருந்து பிராங் கைரைவின் குறிப்புகளுடன், ரிஷி

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts