அநுராதபுர மாவட்டத்தில் பலாகல பிரதேச
செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் காரியாலய தினமான
திங்கள் மற்றும் புதன் ஆகிய தினங்களில் ஹபாயா அணியக்கூடாது என பலாகல
பிரேதேச செயலாளர் கே.பீ.எஸ்.பீ. கழுவாராய்ச்சி கட்டளையிட்டுள்ளார்.
அப்பிரேதச சபையில் 9 பெண் முஸ்லிம்
உத்தியோகத்தர்கள் பணி புரிவதாகவும் அவர்களில் இருவர் மௌலவியாக்களுமாவர்.
இவர்கள் இருவருக்கும் குறித்த தினத்தில் காரியாலயத்தினத்தில் ஹபாயா அணிய
முடியுமெனவும் ஏனையவர்கள் சாரி அணிந்து வரவேண்டும் எனவும் எழுத்து மூலம்
தெரிவித்துள்ளார்.
(ஹபாயா அணியக் கூடாதென்று பிரதேச செயலாளர் கொடுத்த கடிதம்)
கடந்த வெசாக் தினத்தன்று குறித்த பிரதேச
செயலகத்தில் நடைப்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வூகளில் குறித்த முஸ்லிம் பெண்கள்
பங்குபெற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இவர் இவ்வாறான
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
(பிஸ்ரின் முஹம்மத்)
0 கருத்துகள்: