
இந்நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் எப்படி நடந்தது என தெரியவில்லை.
ஏனெனில் விபத்து நடந்த போது தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லாததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 22 நேவிசீல் கமாண்டர்கள் உட்பட 30 வீரர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: