கொழும்பு காலி வீதி - மவுன்ட்லெவனியாவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
வாகன விபத்தை அடுத்து மவுன்ட்லெவனியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை வான் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
விபத்து இடம்பெற்றமைக்கு வானின் சாரதியே முழுமையான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தற்சமயம் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வாகன விபத்தை அடுத்து மவுன்ட்லெவனியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனியார் பஸ் ஒன்றுடன் பாடசாலை வான் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒரு மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் ஆறு மாணவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
விபத்து இடம்பெற்றமைக்கு வானின் சாரதியே முழுமையான காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தற்சமயம் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்: