
கோட் அப்டு அருகில் உள்ள குவாசிம் பெலா நகரில் இரண்டு பேரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கார் மூலம் கடத்தி சென்றனர்.
கடத்திச் சென்றவர்களில் ஜேர்மனியை சேர்ந்தவர் பர்ன்ட்(45), இத்தாலியை சேர்ந்தவர் கியோவான்னி(38) என்றும் தொண்டு நிறுவனத்தில் திட்ட இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருவரும் பணிபுரிந்து வருவதாகவும், இவர்கள் கோட் அப்டு பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட சென்ற போது அவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாகவும் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறினார்.
0 கருத்துகள்: