சவுதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 100 கசயடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

சவுதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சூனியம் செய்து உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் ஹும்முல் ஹம்மாம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள துங்கசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சவுதி வீடொன்றில் இருந்த தனது பெண் உறவினரை சந்தித்து ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றபோது தான் கைது செய்யப்பட்டதாக துங்கசிறி, இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்த துங்கசிறிக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.

இவ்வருடம் மே மாதம் துங்கசிறி தனது ஒருவருட கால சிறை தண்டனையை நிறைவு செய்வார் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் துங்கசிறியின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தனது இந்த வழக்கில் தூதரகமோ பணிபுரிந்த வீட்டு உரிமையாளரோ எவ்வித உதவியும் செய்யவில்லை என துங்கசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
சவுதியில் சூனியம் செய்த இலங்கை சாரதிக்கு ஒரு வருட சிறையும் 100 கசயடியும்! 

சவுதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அவருக்கு 100 கசயடியும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. 

சவுதியில் வீட்டு சாரதியாக பணிபுரிந்த பிரேமநாத் பெரேராலாகே துங்கசிறி என்பரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 

சூனியம் செய்து உள்நாட்டு சட்டத்தை மீறியதோடு இனந்தெரியாத பெண்ணோடு இணைந்து செயற்பட்டதாகவும் ஹும்முல் ஹம்மாம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள துங்கசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

சவுதி வீடொன்றில் இருந்த தனது பெண் உறவினரை சந்தித்து ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றபோது தான் கைது செய்யப்பட்டதாக துங்கசிறி, இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

பதியத்தலாவ பகுதியைச் சேர்ந்த துங்கசிறிக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். 

இவ்வருடம் மே மாதம் துங்கசிறி தனது ஒருவருட கால சிறை தண்டனையை நிறைவு செய்வார் என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மன்னிப்பு வழங்கப்படுவோர் பட்டியலில் துங்கசிறியின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனவும் சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

தனது இந்த வழக்கில் தூதரகமோ பணிபுரிந்த வீட்டு உரிமையாளரோ எவ்வித உதவியும் செய்யவில்லை என துங்கசிறி குற்றம் சுமத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts