இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமயப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக பேசியமைக்காக ஐ.தே.க. தலைவரை உலமா கட்சி பாராட்டியிருப்பதோடு, இதற்காக அவரை முஸ்லிம் இயக்கங்கள் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என கோரியிருப்பதுடன், அவருக்கான அரசாங்கத்தின் பிழையான பதிலை தாமும் இணைந்து தயாரித்ததாக கூறும் ஹக்கீமையும் கண்டித்துள்ளது என உலமா கட்சி தெரிவிக்கின்றது.

இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசா மடந்தைகளாக இருக்கும்போது, ஐ.தே.க. தலைவர் துணிச்சலுடன் இதுபற்றி பேசியமை பாராட்டுக்குரியதாகும். பெரும்பான்மை சமூகத்தின் விமர்சனத்துக்குள்ளாகலாம் என்றிருந்தும் அவர் எம் சமூக உரிமைகளை பேசியமைக்காக நாம் முஸ்லிம்கள் சார்பில் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை, தமக்கு நல்லது செய்பவரை மனந்திறந்து பாராட்டும் பழக்கம் நமது சமூகத்திடம் இல்லாமையும், பதவிக்கும், அமைச்சர்களுக்கும் வால்பிடிக்கும் மோசமான போக்கும் மிகவும் கவலையளிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கு இதுவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூட நன்றி தெரிவிக்காமல் யாரையோ திருப்திப்படுத்த முனைந்துள்ளமை இஸ்லாத்துக்கு முரண்பட்ட செயலாகும்.

தவறு செய்பவர்களை விமர்சிக்கும் எமது உலமா கட்சி நல்லது செய்பவர்களை பாராட்டுவதில் எப்போதுமே சிறந்த வழிகாட்டலை செய்து வந்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள் ரணிலை பகிரங்கமாக பாராட்டி அறிக்கைவிட வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் எமக்காக பேசுவதற்கு எந்தவொரு சிங்கள உறுப்பினரும் முன்வர மாட்டார் என்பதையும் கூறவிரும்புகிறோம்.

மேலும் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரை தாக்கப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பதில் தமது ஒப்புதல் மூலமே தயாரிக்கப்பட்டது என மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளமை கண்டிப்புக்குரியது மட்டுமன்றி மிகப்பெரிய காட்டிக் கொடுப்புமாகும். அனுராதபுரம், தம்புள்ள, தெஹிவளை, குருணாகல் போன்ற இடங்களில் தாக்கப்பட்டவை முஸ்லிம்களின் மதஸ்தலம் இல்லாமல் முஸ்லிம் கேளிக்கை ஸ்தலம் என்றா இந்த முஸ்லிம் தலைவர்கள் நினைத்துக்கொண்டார்கள் என கேட்கின்றோம்.

சில விடயங்களில் மட்டுமே தமது கருத்து உள்வாங்கப்பட்டதாக பின்னர் அறிக்கை விட்டு சமாளிக்க முனைந்த ஹக்கீம் எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் அரச கூறப்பட்ட போது மௌனமாக இருந்தது நிச்சயமாக காட்டிக்கொடுப்பாகும்.

1980களில் முஸ்லிம் சமூகம் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது அன்றிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது தொகுதிகளுக்கு சிறந்த சேவைகளை செய்திருந்தும் அவர்களுக்கெதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட கிழக்கு முஸ்லிம்கள் இன்று அதை விட மிக மிக மோசமான நிலையை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் போது அமைச்சர்களின் காட்டிக்கொடுப்புக்களையும், மௌனத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களும் சுயநல அரசியலைத்தான் விரும்பகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சுயநல அரசியல்வாதிகளின் இத்தகைய நிலைக்கு அவர்கள் பின்னால் திரியும் முஸ்லிம் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டும்.


முஸ்லிம்கள் பற்றி பேசிய ரணிலுக்கு பாராட்டு: தலையசைத்த ஹக்கீமுக்கு கண்டனம் - உலமா கட்சி


இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமயப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விரிவாக பேசியமைக்காக ஐ.தே.க. தலைவரை உலமா கட்சி பாராட்டியிருப்பதோடு, இதற்காக அவரை முஸ்லிம் இயக்கங்கள் வெளிப்படையாக பாராட்ட வேண்டும் என கோரியிருப்பதுடன், அவருக்கான அரசாங்கத்தின் பிழையான பதிலை தாமும் இணைந்து தயாரித்ததாக கூறும் ஹக்கீமையும் கண்டித்துள்ளது என உலமா கட்சி தெரிவிக்கின்றது. 

இது சம்பந்தமாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் பேசா மடந்தைகளாக இருக்கும்போது, ஐ.தே.க. தலைவர் துணிச்சலுடன் இதுபற்றி பேசியமை பாராட்டுக்குரியதாகும். பெரும்பான்மை சமூகத்தின் விமர்சனத்துக்குள்ளாகலாம் என்றிருந்தும் அவர் எம் சமூக உரிமைகளை பேசியமைக்காக நாம் முஸ்லிம்கள் சார்பில் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேவேளை, தமக்கு நல்லது செய்பவரை மனந்திறந்து பாராட்டும் பழக்கம் நமது சமூகத்திடம் இல்லாமையும், பதவிக்கும், அமைச்சர்களுக்கும் வால்பிடிக்கும் மோசமான போக்கும் மிகவும் கவலையளிக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுக்கு இதுவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கூட நன்றி தெரிவிக்காமல் யாரையோ திருப்திப்படுத்த முனைந்துள்ளமை இஸ்லாத்துக்கு முரண்பட்ட செயலாகும். 

தவறு செய்பவர்களை விமர்சிக்கும் எமது உலமா கட்சி நல்லது செய்பவர்களை பாராட்டுவதில் எப்போதுமே சிறந்த வழிகாட்டலை செய்து வந்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பள்ளிவாசல் சம்மேளனங்கள் ரணிலை பகிரங்கமாக பாராட்டி அறிக்கைவிட வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்தில் எமக்காக பேசுவதற்கு எந்தவொரு சிங்கள உறுப்பினரும் முன்வர மாட்டார் என்பதையும் கூறவிரும்புகிறோம். 

மேலும் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரை தாக்கப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பதில் தமது ஒப்புதல் மூலமே தயாரிக்கப்பட்டது என மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளமை கண்டிப்புக்குரியது மட்டுமன்றி மிகப்பெரிய காட்டிக் கொடுப்புமாகும். அனுராதபுரம், தம்புள்ள, தெஹிவளை, குருணாகல் போன்ற இடங்களில் தாக்கப்பட்டவை முஸ்லிம்களின் மதஸ்தலம் இல்லாமல் முஸ்லிம் கேளிக்கை ஸ்தலம் என்றா இந்த முஸ்லிம் தலைவர்கள் நினைத்துக்கொண்டார்கள் என கேட்கின்றோம். 

சில விடயங்களில் மட்டுமே தமது கருத்து உள்வாங்கப்பட்டதாக பின்னர் அறிக்கை விட்டு சமாளிக்க முனைந்த ஹக்கீம் எந்தப்பள்ளிவாயலும் தாக்கப்படவில்லை என பாராளுமன்றத்தில் அரச கூறப்பட்ட போது மௌனமாக இருந்தது நிச்சயமாக காட்டிக்கொடுப்பாகும். 

1980களில் முஸ்லிம் சமூகம் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய போது அன்றிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது தொகுதிகளுக்கு சிறந்த சேவைகளை செய்திருந்தும் அவர்களுக்கெதிராக பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட கிழக்கு முஸ்லிம்கள் இன்று அதை விட மிக மிக மோசமான நிலையை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் போது அமைச்சர்களின் காட்டிக்கொடுப்புக்களையும், மௌனத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களும் சுயநல அரசியலைத்தான் விரும்பகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. சுயநல அரசியல்வாதிகளின் இத்தகைய நிலைக்கு அவர்கள் பின்னால் திரியும் முஸ்லிம் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டும்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts