கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்தரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் புத்தினி கௌசல்யா என்ற சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (09) இடம்பெறவுள்ளன.

மாபிம பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

5 வயதுடைய கௌசல்யா வைத்திய பரிசோதனைக்காக கடந்த 30ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமி ஸ்கேன் செய்யப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஸ்கேன் இயந்திரம் மற்றும் அதனை இயக்கிய வைத்தியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பிள்ளை உயிரிழந்த செய்தியைகூட தங்களிடம் கூறாமல் வைத்தியசாலை தரப்பு மறைத்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இக்குற்றச்சாட்டு குறித்து தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயந்த தர்மதாசவிடம் அத தெரண வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், சிறுமி மரணத்தில் வைத்தியசாலை தரப்பினர் மீது எந்த தவறும் இல்லை என கூறினார்.

சட்டத்தணியின் ஆலோசனைபடி இது குறித்து மேலதிக கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் குறிப்பிட்டனர்.

இதயத்துடிப்பு நின்று போனதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மரணம் குறித்த நீதவான் விசாரணை எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது பெற்றோர் கருத்து முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இது குறித்து விசாரணை நடாத்த வைத்திய குழுவொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
ஸ்கேன் செய்யும் போது பலியான சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று 

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ஸ்கேன் இயந்தரத்தில் ஏற்பட்ட கோளாறினால் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் புத்தினி கௌசல்யா என்ற சிறுமியின் இறுதிக் கிரியைகள் இன்று (09) இடம்பெறவுள்ளன. 

மாபிம பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. 

5 வயதுடைய கௌசல்யா வைத்திய பரிசோதனைக்காக கடந்த 30ம் திகதி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

சிறுமி ஸ்கேன் செய்யப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஸ்கேன் இயந்திரம் மற்றும் அதனை இயக்கிய வைத்தியர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். 

தமது பிள்ளை உயிரிழந்த செய்தியைகூட தங்களிடம் கூறாமல் வைத்தியசாலை தரப்பு மறைத்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இக்குற்றச்சாட்டு குறித்து தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயந்த தர்மதாசவிடம் அத தெரண வினவியது. 

அதற்கு பதிலளித்த அவர், சிறுமி மரணத்தில் வைத்தியசாலை தரப்பினர் மீது எந்த தவறும் இல்லை என கூறினார். 

சட்டத்தணியின் ஆலோசனைபடி இது குறித்து மேலதிக கருத்து வெளியிட முடியாது என அவர் தெரிவித்தார். 

சம்பவம் குறித்து கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் குறிப்பிட்டனர். 

இதயத்துடிப்பு நின்று போனதால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 

மரணம் குறித்த நீதவான் விசாரணை எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது பெற்றோர் கருத்து முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, இது குறித்து விசாரணை நடாத்த வைத்திய குழுவொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts