வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகருக்குள் நுழையும் சகல வாகனங்களுக்கும் கட்டணமொன்றை அறவிடுவதற்காக அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் இதனை உள்ளடக்குவது தொடர்பாக அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருவதுடன் இது தொடர்பாக தற்போது அதிகாரிகளுக்கிடையே கலந்துரையடலொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கமைய காலி வீதி கண்டிவீதி மற்றும் நீர்கொழும்பு வீதி அடங்கலாக கொழும்புக்குள் வாகனங்கள் நுழையும் சகல வீதிகளிலும் இதற்காக விசேட நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் நிலையங்களில் கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன் அந்தப் பற்றுச்சீட்டை வாகனங்கள் கொழும்பு நகரிலிருந்து வெளியேறி செல்லும் வரை கவனமாக வைத்திருக்க வேண்டிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கான யோசனைகள் கோரப்பட்ட வேளையில் கொழும்பு மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த யோசனைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts