ஈராக்கில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர். அந்த நாட்டின் சிறுபான்மையினரான சன்னி முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிக்கு மிக அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

பாக்தாத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகுபா நகரின் மசூதி ஒன்றில், தொழுகை முடித்தவர்கள் வெளியே வந்த சமயத்தில் முதல் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கியவர்களை காப்பாற்றும் நோக்கில் அப்பகுதியில் ஏராளமானோர் கூடிய சிறிது நேரத்திற்குள் இரண்டாவது குண்டு வெடித்தது.

ஷியா, சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பகையின் சமீபத்திய உச்சகட்ட மோதலாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

2011 இல் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து இந்த இரு குழுக்களுக்கு இடையேயான பதட்டம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts