கண்டியில் நடைபெற்ற ஹோட்டல் பயிற்சிப் பாடசாலை திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவுப் ஹக்கீம் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயில் மூலம் பயணம் செய்தார்.

ரயிலில் சுடர் ஒளி பத்திரிகையை வாசித்தவாறே பயணம் செய்தார் என்பதும் விசேட அம்சமாகும்.

அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்கள் சொகுசு வாகனங்களில் பயணம் செய்கின்ற இன்றைய காலகட்டத்தில் நீதி அமைச்சரின் இந்த செயற்பாடு ஏனைய அமைச்சர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரயிலில்தான் பிரயாணங்களை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அந்த நிலைமை மாறிவிட்டது. மக்களுக்குச் சேவை செய்யப்புறப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எரிபொருள் செலவுக்காக மாதமொன்று லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் டாக்டர் ஜலால்தீன் கூடுதலாக தனது பயணத்தை கொழும்புக்கு ரயிலில்தான் மேற்கொண்டுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்து கொண்ட இத்திறப்பு விழாவில் நீதி அமைச்சரின் ரயில் பயணத்தை எல்லோரும் சிலாகித்துப் பேசியதோடு, இந்த முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும் எனவும் பேசிக்கொண்டனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts