சகோதரியை மண்வெட்டியால் தாக்கி காயம் ஏற்படுத்தியவருக்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிபதி ரி. சரவணராஜா ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த நபர் நீதிவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவில் உள்ள வீடொன்றில் திருமணமான தனது அக்காவிடம் தம்பி செலவுக்காக பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று அக்கா மறுக்க அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அக்கா மீது தம்பி எறிந்துள்ளார்.

இதன் போது அக்காவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அக்கா கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அவருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts