1961
ஆம் ஆண்டு 27 வயதான Leonid Rogozov க்கு கடும் வயிற்று வலியும்
காய்ச்சலும் வந்தது.அவரே தன்னை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு குடல்
அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார். குடல் அழற்சி நோய் மோசமாக
இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்
வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.அதனால் அவரே அவருக்கு அறுவை
சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
மயக்க மருந்து
கொடுக்காமல் வெறும் மறத்து போகும் மருந்து கொடுத்து அவரே அறுவை சிகிச்சை
செய்ய ஆரம்பித்தார்.அவருடைய உதவிக்கு அவர்கள் நண்பர்கள் ஒருவர் இஞ்சினியர்
இன்னொருவர் வான்வெளி ஆராய்ச்சியாளர் உடன் இருந்தனராம். மருத்துவர்களின்
பார்வை பருந்தை போல துல்லியமாகவும் இதயம் சிங்கத்தை போல தைரியமாகவும்
இருக்கும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துகாட்டு.
0 கருத்துகள்: