இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகாயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு
அருகில் 10 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த தாக்குதலில் 3 அல்லது 4 நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உள்துறை மந்திரி ஷிண்டே தெரிவித்தார்.
இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
(மாலை மலர்)
இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த தாக்குதலில் 3 அல்லது 4 நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று உள்துறை மந்திரி ஷிண்டே தெரிவித்தார்.
இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடந்து 9 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
(மாலை மலர்)
0 கருத்துகள்: