
இந்தோனேசியாவில் ஷரியத் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாண்டா ஏஸ் மாகாணத்தில் உள்ள லோக்சூமாவே நகர மேயர், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அதன் படி பெண்கள் இறுக்கமான பேண்ட் அணிய கூடாது, கள்ளக்காதல், விபசாரம், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக ஆண்களுடன் பைக்கில் செல்லும் போது, இருக்கையின் பின்பக்கம் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்ந்து செல்ல கூடாது.
அப்படி உட்காருவது சரியில்லை, ஒரு பக்கமே இரண்டு கால்களையும் வைத்துக் கொண்டு பைக் சீட்டில் உட்கார்ந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரண்டு பக்கமும் கால் போட்டு பெண்கள் பைக் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால் பைக் ஓட்டும் போது முஸ்லிம் பாரம்பரியப்படி உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: