கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸுல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்களைக் குறித்து ஆயிஷா ஸுல்ஹி, அல்-வதனுல் மிஸ்ரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது:

"பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு 'மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் - இவற்றுள் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்?' என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

மியான்மரில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலை செய்யப்படும்பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளைக் கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்.

பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ள முயல்கிறேன். ஆனால், பெளத்தர்களின் தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்"

இவ்வாறு ஆயிஷா ஸுல்ஹி கூறியுள்ளார்.
மிகைத்தவனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டார்கள் என்பதையே அவர்கள் செய்த குற்றமாகக் கருதி (எதிரிகள் அவர்களைப் பழிவாங்கி)னர் (அல்குர் ஆன் 85:8).

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts