இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் மேலும் 4 மாத சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமீறலாகவும், உரிய பணி அனுமதியின்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்பவோ, சட்டத்திற்குட்பட்டு தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவோ சவூதி அரேபியா அறிவித்திருந்த சலுகைக் காலம் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதிக்குள் (அரபு புதுவருடம் முஹர்ரம் 1) எவ்வித அபராதமோ, தண்டனையோ இன்றி அத்தகையோர் தம் நாடு திரும்பவோ, முறையான பணி தேடி அமரவோ செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையான கடவுச் சீட்டுகளின்றியும், பணி ஆவணங்கள் இன்றியும் தவித்த பல வெளிநாட்டவருக்கு, குறிப்பாக இந்தியருக்கு இந்தச் சலுகைக் கால நீட்டிப்பு பெரும் ஆறுதலாகவும்,ஆசுவாசமாகவும் அமைந்துள்ளது. முன்னதாக, சட்ட மீறல், உரிய ஆவண அனுமதியின்றி தங்கிப் பணிபுரிவோர் ஜூலை 3ம் தேதிக்குப் பின்னர் பிடிபட்டால் கடும் சிறைவாசமும், அபராதமும் விதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க செய்தியாக, தாயகம் செல்வோர், மீண்டும் பணி வாய்ப்பு பெற்று மீண்டும் சவூதி வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம்.

முன்னதாக, துயருறும் இந்தியர்கள் தாயகம் செல்வதற்குரிய அவசரக் கடவுச் சான்று (EC) பெறவும், அல்லது, முறையான பணி வாய்ப்புகளைப் பெறவும் இந்தியத் தூதரகம் விழிப்புணர்வுடன் செயற்பட்டதும், தமுமுக உள்ளிட்ட தமிழக மறறும் இந்திய அமைப்புகள் அதில் பெரும்பங்கு ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts