வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் ஊடகமைப்புகள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்தன. அத்துடன் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் மேற்படி நிறுவனங்கள் ஆணைக்குழுவை வலியுறுத்தியுள்ளன.

ஊடக நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டச் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வெலிவேரிய ரத்துபஸவெல சம்பவத்தில் ஊடகவியலாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தும். இதேவேளை, வெலிவேரிய மக்களிடத்திலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு விடையங்களை நிறுவனம் ஆராய்ந்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் இது தொடர்பாக ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர். எனவே, அவர்களை அழைத்து சம்பவம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை நடத்தவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts