பிரபல
கோடீஸ்வரர் சியாம் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன
மற்றுமொரு குற்றச்சாட்டின் பேரில் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சானி அபேசேகர உள்ளிட்ட நால்வரை திட்டி அச்சுறுத்துய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலிணி கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கடந்த (26) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வேளை மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சானி அபேசேகர உள்ளிட்ட நால்வரை திட்டி அச்சுறுத்துய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலிணி கமகே உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கடந்த (26) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வேளை மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: