பிர­பல கோடீஸ்­வரர் சியாம் கொலைக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் பேரில் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சானி அபேசேகர உள்ளிட்ட நால்வரை திட்டி அச்சுறுத்துய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலிணி கமகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன கடந்த (26) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்­­றம்­சாட்­டப்­பட்­டு கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வேளை மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­க­து.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts