அமெரிக்க
இராணுவ தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் அபாயம் நெருங்கி வரும் நிலையில்
சிரியாவில் பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் நாட்டை விட்டு
வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரசாயன தாக்குதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த குறித்த குழுமம்
தற்போது லெபனானை வந்திருப்பதையடுத்து திடீர் இராணுவ நடவடிக்கை ஒன்று
மேற்கொள்ளப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தாக்குதல் தொடர்பாக முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என
அமெரிக்க உயர் மட்டம் தெரிவித்துள்ள அதே வேளை, கடந்த வாரம் இடம்பெற்ற
இரசாயன ஆயுத தாக்குதலில் 1429 பேர் வரை இறந்துள்ளதாகவும் அதில் 400 க்கும்
மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம் எனவும் தெரிவித்துள்ள செயலாளர் ஜோன் கெரி
சிரிய அரசாங்கமே தாக்குதலுக்குப் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: