ஒருபுறம் ராஜா மகா விகாரை, மறுபுறம் பெரிய புத்தர் சிலை, அடுத்து புத்தகயாவ, இதற்கு நடுவில் ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் பொருந்தாது என்றும் இந்தப் புண்ணிய பூமியை சுத்தமாக வைக்க வெண்டுமெண்டும் முஸ்லிம்களுக்கு பகரகம்மனவில் அவர்களின் மார்க்க வழிபாட்டைச் செய்ய முடியுமென ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ கூறுகிறார்.

மகியங்கனை நகர மத்தியில் உள்ள பள்ளிவாசல் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகியங்கனை என்பது பெரிய வரலாறு உள்ள ஊர் புத்தர் அவர்கள் முதலில் மகியங்கனை வரும் பொது அங்கு எங்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள் அதாவது முதலில் புத்தர் அவர்கள் முதலில் தன மதத்தைப் பரப்பியது எங்கள் வேடர்களுக்குத்தான். நான் நினைக்கிறேன் இந்த நாட்டில் எத்தனையோ மதங்கள் உள்ளன. அதேபோல் 23 ஜாதிகள் உள்ளனர். எல்லோருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றலாம்.

ஆனால் மகியங்கன எங்களுக்கு மட்டும்தான் சொந்தம்.முஸ்லிம்களுக்கு பகரகம்மனவில் ஒரு பழமைவாய்ந்த பள்ளிவாசல் இருப்பது எனக்கு சிறு வயதிலேயே தெரியும். அக்காலம் முதல் அவர்கள் அங்குதான் மதக் கடமையில் ஈடுபட்டார்கள். அப்படி இருக்கும் போது இந்த மூன்று மத வழிபாட்டுத் தலங்களுக்கு இடையில் ஒரு முஸ்லிம்பள்ளி தெவயில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு - பகரகம்மன என்பது மஹியங்கனையிலிருந்து சில கிலோ மீற்றர்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts