கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவி - நீண்ட இழுபறிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் - தற்போதைய முதல்வர் சிராஸ் மீராசாஹிப்புக்கு வழங்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் முதல்வர் பதவியினை சிராஸ் மீராசாஹிப் மற்றும் தற்போதைய பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் ஆகியோரிடையே பகிர்ந்தளிப்பது எனும் உடன்பாடொன்று மு.காங்கிரசினால் எட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில், கல்முனை மாநகர சபையின் முதல்வருக்கான பதவிக் காலத்தின் முதல் அரைவாசிப் பகுதியில் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியினை வகிப்பார் எனவும், அடுத்த அரைவாசிப் பகுதியில் நிஸாம் காரியப்பர் முதல்வராக பதவி வகிப்பார் எனவும் கூறப்பட்டது.

இதனடிப்படையில், சிராஸ் மீராசாஹிப் - கல்முனை மாநகர சபையின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய முதல்வர் சிராஸ் - தனது பதவியினை ராஜிநாமா செய்தால் மட்டுமே - அந்த வெற்றிடத்துக்கு நிஸாம் காரியப்பரை முதல்வராக நியமிக்க முடியும்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை முதல்வர் பதவிக்கான முதல் அரைவாசிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக, தற்போதைய முதல்வர் தனது பதவியினை ராஜிநாமா செய்வாரா என்பது, உள்ளுர் அரசியல் வட்டாரத்தில் சூடான கேள்வியாக உள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts