க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் 15 வயது மாணவி தனது காதலுக்கு பெற்றோர் தடையாக இருந்ததன் காரணமாக பாழடைந்த வீடொன்றுக்குள் தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று உடதும்பர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உடதும்புர பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இம்மாணவியின் சடலம் பாழடைந்த வீடொன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.


இது குறித்து உடதும்பர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இம்மாணவி இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டிருந்ததாகவும் இதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால் மன வேதனையில் பாடசாலை சென்ற இவர் திரும்பி வந்து பாழடைந்த வீட்டுக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts