vishvaமுஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியும், பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வெளியாகவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய இயக்கங்கள் முன்னதாகவே கமலின் அலுவலகத்தில் பார்த்தனர். படத்தை பார்த்த இஸ்லாமிய இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன. உடனடியாக தமிழக காவல்துறை தலைவரையும், தமிழக உள்துறை செயலாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர். துரிதமாக செயல்பட்ட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 15 நாட்களுக்கு படத்தை தமிழகத்தில் தடை செய்தன. அதனை தொடர்ந்து இலங்கை, புதுச்சேரி, அமீரகம், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் தற்போது மலேசியா, சிங்கப்பூர், குவைத் போன்ற நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
தடையை எதிர்த்து விஸ்வரூபத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கும் அவசர விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் நடந்தன. அதன் பின் நீதிபதி வெங்கடாச்சலம் படத்தை பார்த்துவிட்டுதான் தீர்ப்பு கூற முடியும் என்று வழக்கை ஒத்திவைத்தார். தான் 26-01-2013 அன்று படைத்தை காண்பதாகவும், 28-01-2013 அன்று அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவித்தார் அந்த அடிப்படையில் பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து நீதிபதி, அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்பட கூடுதல் வழக்கறிஞர்கள் மற்றும் எல்லாதரப்பு வழக்கறிஞர்கள் என 50 பேர் படத்தை பார்த்தனர்.
பின்னர் வழக்கு 28-01-2013 க்கு விசாரணைக்கு வந்தது இருந்தும் அன்று தீர்ப்பு வெளியாகவில்லை நீதிபதி வெங்கடாச்சலம் அவர்கள் நாளை 29-01-2013 க்கு தீர்ப்பு என்று அறிவித்தார். அதன்படி 29-01-2013 அன்று மூன்று வழக்கறிஞர்கள் கடுமையாக தங்களது வாதங்களை எடுத்துவைத்தனர். அரசு தரப்பும் கடுமையாக தங்களது வாதத்தை எடுத்து வைத்தது. மொத்தம் 7.00 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப்பின் இரவு 8.00 மணிக்கு தீர்ப்பு என்று தெரிவிக்கப்பட்டு பின்னர் அதுவம் மாற்றப்பட்டு இரவு 10.00 மணிக்கு படத்தின் மீதான தமிழக அரசின் தடையை விளக்கி தீர்ப்பு வெளியானது.
அரசு வழக்கறிஞர்களும், இஸ்லாமிய கூட்டமைப்பினர்களின் வழக்கறிஞரும் இத்தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான் நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மராவ் அவர்களை இல்லத்தில் சந்தித்து மேல் முறையீடு செய்தார் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன். மேல் முறையீட்டு மனுவை பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அவர்கள் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை தள்ளிவைத்தார். அதோடு படத்தின் மீதான தடை 30-01-2013 அன்று காலை 10.30 மணிவரை நீடிக்கும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.
அந்தடிப்படையில் இன்று 30-.01-2013 அன்று காலை விஸ்வரூப பட வழக்கு அவசர வழக்காக கருதி உடனடி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையும் நடைபெற்றுகொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த வழக்கை துரிதமாகவும், வலிமையாகவும் எதிர் கொண்ட தமிழக அரசுக்கு சிறுபான்மையின மக்களின் சார்பாக மாபெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts