
விஸ்வரூபம்
திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர்களான
ஏக்கனாயக்க மற்றும் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் ஜமாஅத் நிர்வாகத்திடம்
வாக்குறுதி அளித்துள்ளனர்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25ஆம் திகதி வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக நேற்று 30ஆம் திகதி கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கனாயக்க மற்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரை சந்தித்து திரைப்படத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதை தெளிவுபடுத்தும் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இதேவெளை, விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம் பெற்றிருக்கும் காட்சிகளை தெளிவு படுத்தும் கடிதத்தை திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவர் காமினி குமார சேகரவுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வழங்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதையடுத்து, திரைப்படத்தை இலங்கையில் வெளியிடுவதற்கு தடை விதிக்க தான் ஆவன செய்வேன் என்றும் அவர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25ஆம் திகதி வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக நேற்று 30ஆம் திகதி கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கனாயக்க மற்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரை சந்தித்து திரைப்படத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதை தெளிவுபடுத்தும் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
இதேவெளை, விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம் பெற்றிருக்கும் காட்சிகளை தெளிவு படுத்தும் கடிதத்தை திரைப்பட தணிக்கைக் குழுவின் தலைவர் காமினி குமார சேகரவுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வழங்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதையடுத்து, திரைப்படத்தை இலங்கையில் வெளியிடுவதற்கு தடை விதிக்க தான் ஆவன செய்வேன் என்றும் அவர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.
0 கருத்துகள்: