ஜனாதிபதியுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது ஐந்து யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றில் ஒரு யோசனைக்கு உடனடியாக ஜனாதிபதி தீர்வினை பெற்றுத் தந்ததாகவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஏனைய நான்கு யோசனைகளுக்கும் பின்னர் தீர்வினை பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

1. புத்தசாசனத்தை அர்த்தப்படுத்துவது,
2. புத்தகங்கள், சஞ்சிகைகள் வெளியிடும்போது பெளத்த மதத்திற்கு நிந்தனை ஏற்படுத்தாத வகையில் பாதுகாத்தல்,
3. அறநெறி பாடசாலைகள் நடைபெறும் நாட்களிலும் போயா தினங்களிலும் தனியார் வகுப்புக்களை தடை செய்தல் ,
4. வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பும் போது உரிய பயிற்சிகளை வழங்குதல்,
5. பெண்களை சட்டவிரோதமான முறையில் வதைப்பதை தடைசெய்தல் ஆகிய கோரிக்கைகளே ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

இதன் போது சட்டவிரோதமாக பெண்களை துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடனடியாக தீர்வினை முன்வைத்த ஜனாதிபதி சுகாதார அமைச்சின் உதவியுடன் திட்டமொன்றினை அமுல்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தாக;
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts