கண்டி
நகரில் அமைந்துள்ள சித்திலைப்பை மாவத்தையின் பெயர்ப் பலகையை மை பூசி
அழித்துள்ள இனந் தெரியாத நபர்கள், அதனை வித்யார்த்த மாவத்தை என
மாற்றியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அதேபோன்று கண்டி
மீரா மக்காம் பள்ளிவாசலின் சுவரில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமான
வாசகங்களும் மைகளால் அச்சிட்டு எழுதப்பட்டுள்ளன. "சரியாக இரு. இது சிங்கள
நாடு" எனும் வாசகமே அதில் எழுதப்பட்டுள்ளது. விஷமிகளின் இந்த
செயற்பாடுகள் தொடர்பில் கண்டி ஜம்இய்யதுல் உலமா அப் பிராந்திய பிரதிப்
பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. கண்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்: