4 மணிக்கு "பைஜாமா-குர்தா" அணிந்த நிலையில் நீதிமன்றத்தை விட்டு சென்றவர்.....

6 மணிக்கு "T-ஷர்ட்" அணிந்த நிலையில் பிணமானது எப்படி?

அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹிதை நேற்று (18/05) பைசாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மாலை 3.30 மணிக்கு மேல் லக்னவ் ஜெயிலுக்கு திரும்ப அழைத்து செல்லும்போது, உடனிருந்து போலீஸ் வேனில் ஏற்றியனுப்பிய அவரது
வழக்கறிஞர் முஹம்மத் ஷுஐப்,

6 மணியளவில் "பாராபங்கி- சர்தார் மருத்துவமனை"யில் பிணமாக கிடந்தததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.

மருத்துவமனையில் விசாரித்தபோது, காலித் உயிர் பிரிந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு போலீசால் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.

மாலை 3.30 வரை நீதிமன்ற வளாகத்தில் "குர்தா-பைஜாமா"வுடன் இருந்த காலித் அரைக்கால் அளவை விட சற்று நீளமான கால் சட்டை மற்றும் "Tஷர்ட்" அணிந்த நிலையில் மருத்துவமனை படுக்கையில் கிடத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் வழக்கறிஞர் ஷுஐப்.

போலீஸ் வேனில் "மாரடைப்பால் மரணம்" என சொல்லும் போலீஸ், "உடை மாற்றம்" குறித்து பேச மறுக்கிறது.


இது திட்டமிட்ட கொலை என்கிறார், காலிதின் மற்றொரு வழக்கறிஞர் ரந்தேர் சிங்.

இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், காலிதின் உடலில் பல இடங்களில் கடுமையான காயங்களும் நகக்கீரல்களும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும் வாயிலும் - மூக்கிலும் ரத்தம் தோய்ந்த காயங்களும், கழுத்திலும் தோல் பட்டையிலும் கடுமையான தசை முறிவுகளும் இருப்பதாக "போஸ்ட் மார்டம்" ரிப்போர்ட் மூலம் தெரிய வந்துள்ளது.

திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே அவருடன் குடும்பம் நடத்திய அவரது இளம் மனைவி,

விடுதலையாகி வீடு வந்து சேருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பின் பிணமாக வந்து சேர்ந்துள்ளார்,காலித் முஜாஹித்.


0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts