சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் அவ் அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி, நாடு திரும்ப வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.h
ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்திற்கு பின்னரும் சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என சவூதி அரேபிய சட்டம் கூறுவதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்பும் முகமாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் 24 மணிநேரமும் தனது சேவையை வழங்குவதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் சவூதியிலுள்ள இலங்கையர்கள் 400 பேர் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் அவ் அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி, நாடு திரும்ப வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.h
ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்திற்கு பின்னரும் சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என சவூதி அரேபிய சட்டம் கூறுவதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்பும் முகமாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் 24 மணிநேரமும் தனது சேவையை வழங்குவதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் சவூதியிலுள்ள இலங்கையர்கள் 400 பேர் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்: