மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்;ட நாவற்குடா பிரசேத்தில் நேற்று (25.4.2013) வியாழக்கிழமை முப்பத்து நான்கு கிலோவும் -700 கிராம் கஞ்சாவை காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று இந்த கஞ்சாவை கைப்பற்றியதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் பயனாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.இந்திரனின் ஆலோசனையின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜயவர்த்தன, மற்றும் எஸ்.ஐ.உபாலி, ஸார்ஜன் ஜெயசுந்தர, ஸார்ஜன் பத்மசேன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான விதானகே, மற்றும் ஜயரத்ண ஆகியோர் இந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த பொலிசார் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ 700கிராம் கஞ்சாவை இதன் போது கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் காத்தான்குடி பொலிசார மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் இன்று 26 வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் நடைபெற்றவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts