தவறான மருந்தை வழங்கி குழந்தையொன்று பாதிப்டைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டைஅடுத்து பாமஸி உரிமையாளரும் பதிவு செய்யப்படாத உதவியாளரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

முறைப்பாட்டை விசாரித்த நீதவான் பாமசி உரிமையாளருக்கும் அனுமதிப் பத்திரமற்ற அவரதுஉதவியாளருக்கும் ஒரு இலட்சரூபாசரீரப் பிணையும் ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையும் வழங்கி மேலதிக விசாரணைகளை ஒத்தி வைத்தார்.

கண்டி நகரிலுள்ள பதிவு செய்யப்பட்ட பிரதான வைத்தியர் ஒருவர் வழங்கிய ஆங்கில மருந்துப் பட்டோலைக்கு தவரான மருந்தை வழங்கியதால் இரண்டு வருடக் குழந்தை ஒன்று நோய் வாய்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட குழந்தையின் தந்தைஉரிய மருந்துடன் கண்டி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். தவறான மருந்து வழங்கப்படடமை அங்கு தெரிய வந்ததை அடுத்து தந்தையால் கண்டிப் பொலீஸ்நிலைய சிறு முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்படது.

இது தொடர்பாக கண்டிப் பொலீஸார் தாக்கள் செய்த மனுவை விசாரித்த கண்டி நீதவான் ரவீந்திர பிரேமரட்ன பாமஸி உரிமையாளருக்கும் பதிவு செய்யப்படாத உதவியாளருக்கும் தலா ஒரு இலட்ச ரூபா சரீரப்பிணையையும் ஐயாயிரம் ரூபா ரொக்கப் பிணையையும் வழங்கி வழக்கை மே மாதம 17ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts