பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது,
குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக இன ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது,
குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக இன ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டியது அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
0 கருத்துகள்: