4ம் ஆண்டு மாணவிகள் 11 பேருக்கு காமப்பாடம் புகட்டிய ஆசிரியர்!
கல்கிரியாகம பிரதேச பாடசாலையொன்றின் 4ம் வகுப்பு மாணவிகள் 11 பேரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் இன்று (11) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று (10) மாலை கல்கிரியாகம பொலிஸில் சரணடைந்துள்ளார்.

பாடசாலை முடிந்ததும் மாலை வகுப்பு எனக்கூறி தனது வகுப்பறையில் வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாதென ஆசிரியர் மாணவிகளை மிரட்டியும் வந்துள்ளார்.

மாலை வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி ஒருவரின் வெள்ளை சட்டையில் இரத்தக்கரை காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த தாய் அவரிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து உண்மை அம்பலமாகியது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக இவர் மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

(அத தெரண - தமிழ்)

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts