டெல்
அவீவ் :அமெரிக்காவின் முயற்சியால் அமைதிப்பேச்சுவார்த்தை துவங்கவிருக்கும்
வேளையில் ஃபலஸ்தீன் பகுதிகளில் சட்டவிரோதமாக கூடுதல் யூதக் குடியிருப்பு
வீடுகளை கட்ட இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. மேற்கு கரையிலும்,
ஜெருசலத்திலும் 1200 வீடுகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல்
கட்டுமான அமைச்சர் உரி ஏரியல் தெரிவித்துள்ளார்.
உரி எரியல் மேலும் கூறுகையில், குடிமக்களின் கோரிக்கையை பரிசீலித்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலமில் 793 வீடுகளும், மேற்கு கரையில் 394 வீடுகளும் கட்டப்படும். ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் கட்டிட வேலை துவங்கும். சியோனிசமும், பொருளாதார கட்டமைப்பும் நிலை நாட்டுவதற்கு புதிய திட்டத்தை தயாரித்துள்ளோம். வெளிநாடுகள் எங்களின் கட்டுமான பணிகளில் தலையிடக்கூடாது.’ என்றார்.
ஜெருசலமில் ஃபலஸ்தீனுடன் நேரடிப்பேச்சுவார்த்தை துவங்க 3 தினங்களே மீதமுள்ள நிலையில் இஸ்ரேல், இந்த அடாவடித்தனத்தை துவக்கியுள்ளது. 2010-ஆம் ஆண்டு அமைதிப்பேச்சுவார்த்தை முடங்க காரணமே, இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டுவதாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இரு நாடுகளுக்கும் பயணித்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுச் செய்தார். இதன் ஒருபகுதியாக 100க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.நாளை கைதிகளின் முதல் குழுவினர் விடுதலைச் செய்யப்படுவார்கள். ஆனால், கைதிகளை விடுவிப்பதை எதிர்க்கும் தீவிர யூதர்களை சமாதானப்படுத்தவே புதிய சட்டவிரோத வீடுகளை கட்ட இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்று பி.பி.சி கூறுகிறது.
குடியிருப்புக்களை கட்டுவதை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ் பெறுவோம் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியிருந்தார்.
ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோதமாக 5 லட்சம் யூதர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1967-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்கு பிறகு மேற்கு கரையிலும், ஜெருசலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உரி எரியல் மேலும் கூறுகையில், குடிமக்களின் கோரிக்கையை பரிசீலித்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலமில் 793 வீடுகளும், மேற்கு கரையில் 394 வீடுகளும் கட்டப்படும். ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் கட்டிட வேலை துவங்கும். சியோனிசமும், பொருளாதார கட்டமைப்பும் நிலை நாட்டுவதற்கு புதிய திட்டத்தை தயாரித்துள்ளோம். வெளிநாடுகள் எங்களின் கட்டுமான பணிகளில் தலையிடக்கூடாது.’ என்றார்.
ஜெருசலமில் ஃபலஸ்தீனுடன் நேரடிப்பேச்சுவார்த்தை துவங்க 3 தினங்களே மீதமுள்ள நிலையில் இஸ்ரேல், இந்த அடாவடித்தனத்தை துவக்கியுள்ளது. 2010-ஆம் ஆண்டு அமைதிப்பேச்சுவார்த்தை முடங்க காரணமே, இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்புக்களை கட்டுவதாகும். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இரு நாடுகளுக்கும் பயணித்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுச் செய்தார். இதன் ஒருபகுதியாக 100க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் கைதிகளை விடுவிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.நாளை கைதிகளின் முதல் குழுவினர் விடுதலைச் செய்யப்படுவார்கள். ஆனால், கைதிகளை விடுவிப்பதை எதிர்க்கும் தீவிர யூதர்களை சமாதானப்படுத்தவே புதிய சட்டவிரோத வீடுகளை கட்ட இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்று பி.பி.சி கூறுகிறது.
குடியிருப்புக்களை கட்டுவதை தொடர்ந்தால் பேச்சுவார்த்தையில் இருந்து வாபஸ் பெறுவோம் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியிருந்தார்.
ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோதமாக 5 லட்சம் யூதர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1967-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்கு பிறகு மேற்கு கரையிலும், ஜெருசலத்திலும் இவ்வளவு எண்ணிக்கையிலான யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: