இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை பாராட்­டிக்­கொண்­டி­ருக்­காது, உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளபொது­ப­ல­சே­னாவின் பொது­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இல்­லையேல் எதிர்­கா­லத்தில் சிங்­கள மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயுதம் ஏந்தும் ஆபத்­தான நிலை உரு­வாகும் என்று எச்­ச­ரிக்கை விடுத்தார்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக தேரர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு, கிழக்கு என்­பது இந்­நாட்டின் பிரிக்­கப்­பட்ட தனி பிர­தே­சங்கள் அல்ல. அவை இலங்­கையின் தன்­னா­திக்­கத்­திற்கு உட்­பட்­டவை. எனவேஇ சம்­பந்தன் இலங்­கையை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யரை போல் நாட்டை வடக்குஇ கிழக்கு என தனி­மைப்­ப­டுத்தி பேசு­கிறார்.

அத்­தோடு ‘தன்­னாட்சி அதி­காரம் தொடர்­பாக இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச தயார்’ என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இதன் மூலம் அவர் தலைக்குள் இன்னும் பிரி­வி­னை­வாதம் இருப்­பது வெளிப்­ப­டு­கி­றது.

30 வருட கால யுத்தம் எமது வாழ்வை அழித்து விட்­டது. அர­சி­யல்­வா­திகள் எடுத்த பிழை­யான தீர்­மா­னங்­களால் பல அழி­வு­களை சந்­தித்தோம். பயங்­க­ர­வா­தத்தை அழித்து, ஒழித்து கட்­டிய நாம் தற்­போது வெற்றி பெற்­றுள்ளோம்.

தமிழ் மக்­க­ளுக்கோ, முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ நாம் யுத்தம் செய்­ய­வில்லை. பயங்­க­ர­வா­தத்தின் பிரி­வி­னை­வாத யுத்­தத்­தையே தோல்வி அடைய செய்தோம். இவ்­வா­றான ஒரு நிலையில் சம்­பந்தன் தன்­னாட்சி அதி­காரம் தமக்கு தேவை என கூறி­யுள்­ளமை அர­சியல் அமைப்பை மீறும் செய­லாகும். எனவே அவ­ருக்கு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும் அரு­கதை இல்லை. அவர் இலங்­கையின் சட்­டத்தை மீறி­யுள்ளார்.
எனவேஇ சட்­டத்தை மீறிய சம்­பந்­தனை அர­சாங்கம் உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்­தியா,மொறக்கோ, ஜேர்­மனி போன்ற நாடு­களில் இருந்து இங்கு வந்த முஸ்­லிம்­களும் உரி­மை­களை கேட்கத் தொடங்­கி­யுள்­ளனர்.

இவ்­வாறு தமிழ் முஸ்­லிம்­க­ளுக்கு உரி­மைகள் வழங்­கப்­ப­டு­மானால் சிங்­க­ள­வர்கள் எங்கு போவார்கள். இந்­நிலை தொடருமானால், எதிர்காலத்தில் சிங்களவர்கள் தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தும் ஆபத்தான ஓர் நிலைமை உருவாகும்.

எனவே, அரசாங்கம் நாட்டையும், சிங்கள மக்களையும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts