ஞானசார தேரர் சாராயம் குடித்தமை தொடர்பில் ஒன்பது வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்படி தவறுகளை செய்தவர்தான் மக்களை திருத்த முயற்சித்து வருகிறார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

தென்மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போ­தே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தி, ஐக்கியத்தை சீர்குலைக்கும் பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்­ளேன்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் என்னை விமர்சித்தார். நான் போரில் காயமடைந்தவன். வலது குறைந்த இராணுவ வீரன். போரில் 26 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்தனர். இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்யும் போது ஞானசார தேரர் எங்கிருந்தார்?.

தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்ட போதும் எதனையும் பேசாத ஞானசார தேரர் தற்பொழுது வெறுமனே தேசப்பற்று கதைகளை பேசி வருகிறார்.

ஞானசார தேரர் இன ஐக்கியத்தை அழிக்க முயற்சித்து வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு செல்லவே இவர் இப்படி செயற்பட்டு வருகிறார்.

ஞானசார தேரர் சண்டியர் போல் சண்டித்தனம் காட்டி வருகிறார். இவரது பயங்கரவாத அமைப்பை உடனடியாக தடைசெய்ய வேண்டும். என்னோடு பகிரங்க விவாத்திற்கும் வருமாறு அவருக்கு சவால் விடுக்கின்றேன் என்­றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts