தமக்குக்
கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சிரியா அரசாங்கத்தைத்
தவிர வேறு யாரும் இரசாயன தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லையென
தெரிவித்துள்ளது பிரான்ஸ்.
ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் ஜோர்தானும் அமெரிக்க கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டாது என அறிவித்திருக்கும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் சிரியா மீதான தாக்குதல் ஒன்றை நியாயப்படுத்தும் வகையில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளதோடு இது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தகவல்களின் அடிப்படையில் 1400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும் பிரான்ஸின் தகவல்கள் 281 பேர் இறந்ததாகவே கூறுகிறது.
இதே வேளை உள்ளிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த இரசாயன ஆயுதங்கள் சவுதி இளவரசால் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் ஜோர்தானும் அமெரிக்க கூட்டு இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டாது என அறிவித்திருக்கும் நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் சிரியா மீதான தாக்குதல் ஒன்றை நியாயப்படுத்தும் வகையில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளதோடு இது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தகவல்களின் அடிப்படையில் 1400 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும் பிரான்ஸின் தகவல்கள் 281 பேர் இறந்ததாகவே கூறுகிறது.
இதே வேளை உள்ளிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த இரசாயன ஆயுதங்கள் சவுதி இளவரசால் கிளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: