அம்பாறை ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டென்மார்க் அரசின் உதவியுடன் 2008ம் ஆண்டு குறித்த துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 7000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தையும் ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
மஹிந்த சிந்தனையின் துரித கதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் படி, ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: