அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் பொதுபல சேனா ,ராவண
பலய ,சின்ஹல ராவைய ஆகிய கடும்போக்கு ,தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யுமாறு
அமைச்சரவையை கோரவுள்ளார் . குறித்த அமைப்புக்களை தடைசெய்ய கோரும் ஆவணத்தை
தான் தயாரித்துவருவதாகவும் இன்னும் இரு வாரங்களில் அந்த ஆவணம்
அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இன்றைய சண்டே லீடர்
ஆங்கில பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார் .
பொதுபல சேனா ,ராவண பலய
,சின்ஹல ராவைய ஆகியன விரோதத்தையும் , நாட்டில் அமைதியின்மையையும்
பரப்புவதாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார் .
குறித்த அமைப்புக்கள் பகிரங்கமாக (இன மத) வெறுப்பு பிரசாரம் செய்யும்
நிலையில் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது இருப்பதாகவும்
அமைச்சர் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளார் .
மேலும் அமைச்சர்
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் தொடர்பில்
ஜனாதிபதிக்கு தான் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
நாட்டின் யாப்பு எவரும் தாம் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை
வழங்கியுள்ளது . மக்கள் அச்சுறுத்தல் என்று உணரும்போது அவர்கள்
பொலிசாரிடம் முறையிடமுடியும் பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது
வழக்கு பதிவு செய்யவார் என்றும் தெரிவித்துள்ளார் .
0 கருத்துகள்: