தென்கொரியாவுடன்
போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஆனால் வடகொரியாவின் இந்த
அறிவிப்பை ஏற்க முடியாது என தென்கொரியா கூறியுள்ளது.
கொரிய நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் தென்கொரியா, இதனை
தெரிவித்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை
நிலவி வரும் சூழலில், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே, எல்லைப் பகுதியில்
படைகளை குவிக்க தொடங்கியது வடகொரியா. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் தென்
கொரிய படைகளும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.
இந்த
நிலையில், போர் தொடங்கிவிட்டதாக வடகொரியா நேற்று அறிவித்தது. ஆனால்,
அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என கூறியுள்ள தென்கொரியா, இதுபோன்ற
தொடர் அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என வடகொரியாவுக்கு கண்டனம்
தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்: