அண்மைக்காலமாக நாட்டில் இஸ்லாத்துக்கும்
முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் சகலரையும்
பாதிப்புக்குள்ளாக்கியதோடு, நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தலாக அமைந்தது. அந்நடவடிக்கைகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
இம்சைப்படுத்தியதுடன் அவர்களது அன்றாட வாழ்வையும் பெரிதும் பாதித்தது.
ஆபத்தான
நிலைமைகளில் றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குனூத்
அந்நாஸிலாவை ஓதிவந்தார்கள். அதன் ஒளியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன
நிலைமையைக் கவனத்திற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
முஸ்லிம்களினதும், நாட்டினதும் தொழுகைகளிலும் அனைத்து முஸ்லிம்களையும்
வேண்டியிருந்தது.
ஜம்இய்யாவின்
வழிகாட்டலை ஏற்று நம்மக்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று பிரார்த்தனை
செய்து வந்ததோடு குனூத் அந்நாஸிலாவையும் தமது தொழுகைகளில் ஓதி வந்தனர்.
தற்பொழுது குனூத் அந்நாஸிலாவைத் தொடரவேண்டிய அவசியம் உணரப்படாமையினால் அதனை
நிறுத்திக் கொள்ளலாம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
தெரிவித்துக்கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக. நாட்டில் அமைதியையும் சுமூக நிலைமையையும் ஏற்படுத்துவானாக.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
0 கருத்துகள்: