மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் 5 கருணை மனுக்களைக் குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார். மேலும் 2 பேரின் மரண
தண்டனையை அவர் ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்
மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலிக்குமாறு
பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத்
தலைவருக்கு அனுப்பியது. அவர்களின் விவரம் வருமாறு:
ஹரியாணாவைச் சேர்ந்த தரம்பால் (ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்ததுடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொன்ற வழக்கு).
* ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் சோனியா மற்றும் அவரது கணவர்
சஞ்சீவ் (தனது பெற்றோர் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை சோனியா தன்
கணவருடன் சேர்ந்து செய்த கொலை வழக்கு).
* உத்தரகண்டைச் சேரிந்த சுந்தர் சிங் (பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு)
* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாஃபர் அலி (தன் மனைவி மற்றும் 5 மகள்களைக் கொன்ற வழக்கு)
* கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரவீண்குமார் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொலை செய்த வழக்கு).
* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்மீத் சிங் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த வழக்கு).
* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ராம்ஜி (தங்கள் தம்பி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கொலை செய்த வழக்கு).
* மேலும், மனைவி மற்றும் மகளைக் கொலை செய்த வழக்கில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த சைபண்ண நிங்கப்ப நாடிகர் என்பவரது
கருணை மனுவும் நிலுவையில் இருந்து வந்தது.
குடியரசுத் தலைவர்
முடிவு: இந்நிலையில், மேற்கண்ட நபர்களின் கருணை மனுக்களில், 7 கருணை
மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளதாக தில்லியில் அரசு
வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 5 கருணை மனுக்களை அவர்
நிராகரித்துள்ளார். குர்மீத் சிங், தரம்பால், சோனியா-சஞ்சீவ்குமார்,
பிரவீண்குமார், சுந்தர்சிங் ஆகியோரின் கருணை மனுக்களே அவை என்று தெரிகிறது.
கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் விரைவில்
தூக்கிலிடப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
தவிர, 2 பேரின் மரண
தண்டனையை வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனையாகக் குறைத்து குடியரசுத்
தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்: