உத்தரப்பிரதேசம்
"ஆசம்கர்" நகரில், நேற்று முன்தினம் (02/04) செவ்வாய்க்கிழமையன்று,
சீனியர் செகண்டரி ஸ்கூலில் 10ம் வகுப்பு சம்ஸ்கிருத பரீட்சை
எழுதிக்கொண்டிருந்த மாணவி "பூனம் இந்திராவதி தேவி" திடீரென பிரசவ வலியால்
துடித்தார்.
நிலைமையை உணர்ந்த "பறக்கும் படையை சேர்ந்த
பார்வையாளர்கள்" மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டு
ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தனர்.
எனினும் ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாகவே, பரீட்சை ஹாலிலேயே வெற்றிகரமாக குழந்தையை பெற்றெடுத்தாள், பத்தாம் வகுப்பு மாணவி.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்தார் மாவட்ட கல்வி அதிகாரி.
0 கருத்துகள்: