இந்தியா இலங்கையில் தீவிரவாதத்தை வளர்த்ததாகவும் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலை புலி உறுப்பினர்களுக்கு தமிழ் நாடே பயிற்சியளித்ததாகவும் பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1983 முதல் 1987 வரையான காலப்பகுதியில் இந்தியாவின் உளவுப்பிரிவான ரோ அமைப்பே விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது. அத்துடன் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோருக்கு இந்தியாவின் தமிழகத்திலேயே பயிற்சி வழங்கப்பட்டது.
இலங்கையில் தீவிரவாதத்தை வளர்த்த இந்தியா, தெற்காசியாவின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமான இலங்கையின் சுயாதீனத்துக்கு குறுக்காக நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஐ.பி.எல்.போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக்கூடாது என தெரிவித்தமையையும் தமிழகத்தில் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்தினையும் சுட்டிக்காட்டியுள்ள குறித்த பத்திரிக்கை அவை அனாவசியமானவை என வர்ணித்துள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts