ஹலால் வேண்டாமென்றால் சும்மா இருங்கள். உங்களை கழுத்தினால் அழுத்திப்பிடித்து
யாரும் அதனை உங்களுக்கு ஊட்டப்போவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஹலால் மூலம் செய்யப்படுவது நல்ல விடயமே. அது இஸ்லாமிய மதத்தின் ஒரு நடைமுறை மட்டுமே. ஹலால் மற்றும் ஹராம் என இரண்டு விடயங்கள் உள்ளன. இவை அனைத்து மதங்களிலும் உள்ளவையே. அதாவது செய்வதற்கு ஆகுமானவையும் கூடாதவையுமே இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

குறித்த ஹலால் பிரச்சினைக் காரணாமாக தற்போது நாட்டில் இரு இனங்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹலால் குண்டு எப்போதுவேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

ஹலால் வேண்டாமென்றால் சும்மா இருங்கள். உங்களை கழுத்தினால் அழுத்திப்பிடித்து
யாரும் அதனை உங்களுக்கு ஊட்டப்போவதில்லை.

30 வருட யுத்தத்திலிருந்து மீண்டுள்ள நாம் மீண்டும் இது போன்ற ஒரு காரணத்துக்காக யுத்தமொன்றினை செய்வதை அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களுடனான மோதல் நிலைமையொன்றை ஏற்படுத்த மேற்கத்தேய நாடுகளே சதி முயற்சிகளை செய்கின்றான. என தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts