ஆட்கடத்தல் உள்ளிட்ட தமது பிராந்தியத்தில் இடம்பெறும் அனைத்து வகையான கடத்தல்களையும் கட்டுப்படுத்த இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலமே பிராந்திய குற்றச்செயலகளிக் கட்டுப்படுத்த முடியும் என பங்களாதேஷிற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சார் ஜீ எல் பீரிஸிடம் , அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா வலியுறுத்தியதாக பங்களாதேஷ் பிரதமரின் ஊடக செயலாளர் அபுல் கலாம் அஷாட்டை ஆதாரம் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தியில்,
இலங்கையுடன் சிறந்த உறவை பேண பங்காதேஷ் விரும்புவதாகவும் அத்துடன் இதன்போது இலங்கை மற்றும் பங்களதேஷிற்கு இடையிலான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பாக பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படுகின்ற மருந்து பொருட்களை இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு ஷேக் ஹசினா கோரியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பொது நலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பங்களாதேஷிடம் இந்த வருடம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது நலவாய மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோருவதற்காகவே அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அங்கு சென்றதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
.
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த புரிந்துணர்வு அவசியம்:பீரிஸிடம் ஹசீனா


ஆட்கடத்தல் உள்ளிட்ட தமது பிராந்தியத்தில் இடம்பெறும் அனைத்து வகையான கடத்தல்களையும் கட்டுப்படுத்த இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம் என பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.

இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் மூலமே பிராந்திய குற்றச்செயலகளிக் கட்டுப்படுத்த முடியும் என பங்களாதேஷிற்கான  உத்தியோக பூர்வ விஜயம்  ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சார் ஜீ எல் பீரிஸிடம் , அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா வலியுறுத்தியதாக பங்களாதேஷ் பிரதமரின் ஊடக செயலாளர் அபுல் கலாம் அஷாட்டை ஆதாரம் காட்டி  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
குறித்த செய்தியில்,
இலங்கையுடன் சிறந்த உறவை பேண பங்காதேஷ் விரும்புவதாகவும் அத்துடன்  இதன்போது இலங்கை மற்றும் பங்களதேஷிற்கு இடையிலான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் குறிப்பாக பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படுகின்ற மருந்து பொருட்களை இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யுமாறு  ஷேக் ஹசினா கோரியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதனிடையே பொது நலவாய அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பங்களாதேஷிடம் இந்த வருடம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது நலவாய மாநாட்டை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோருவதற்காகவே அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அங்கு சென்றதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts