முஸ்லிம்
பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது
கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்
முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை
அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து
தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா
தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம்
பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தியதாக
தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது
பர்தாவையோ அகற்றத்தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர்
சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும்
தன்னை சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்
குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொதுபலசேனா புர்காவை
கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில்
உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக
தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்
பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது
கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத்தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னை சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொதுபலசேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத்தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியழ்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா, இது தொடர்பில் ஆட்சேபனையுள்ளவர்கள் எந்தவொரு நேரத்திலும் தன்னை சந்திக்க முடியுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த தனியார் வானொலியின் கருத்துக்கணிப்பின் போது, பொதுபலசேனா புர்காவை கொள்ளையர்களின் ஆடையாக அடையாளப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் இதற்கு பதிலளித்துள்ள உலமா சபை குறித்த ஆடையானது தமது மதத்தில் உள்ளதென்றும் அதனை ஒருபோதும் அகற்ற முடியாது எனவும் தெளிவாக தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: