ஐநா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்: மார்ச் 20, 21 இலங்கைக்கு சோதனை நாட்கள்ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடர் நாளை (25) சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளை இலங்கையிலிருந்து ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார்.

அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் உடன் செல்லவுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் 4 பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல்களும், ஒரு சிரேஷ்ட அரச சட்டத்தரணியும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு அன்றைய தினம் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அத தெரண தமிழ்)


0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts