ஆறு ஆமைகளை எடுத்துச் சென்ற சீன பிரஜை ஒருவரும் அவருடைய வாகன சாரதியும் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி
ஆமைகளை எடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மாதறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(அத தெரண தமிழ்)

0 கருத்துகள்: